Monday, 7 July 2014

சிதம்பர ரகசியம்!

சிதம்பர ரகசியம்! 24-Nov-1992ல் எழுதப்பட்ட ஸ்வாமியின் இந்தக் கவிதையின் ஆழமும், அர்த்தமும் இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகும் ஸ்வாமிக்கே வியப்பாக உள்ளது. ஆன்மீகத் தேடல் தொடங்க ஆண்டு பல இருப்பினும் (சத்குருவின் அருள் பார்வை ஸ்வாமி மீது பட்டது 2009ம் ஆண்டு), அதற்கான விதை உள்ளே பொதிந்திருந்ததை இந்தக் கவிதையைச் சுவைக்கும்போது உணரமுடிகிறது. 12-Dec-1992ல் கணையாழிக்கு அனுப்பப்பட்ட (புனைப் பெயர் சி பி வியாஸ்) இந்தக் கவிதை பதிப்பிக்கபடாமல் போனது பற்றி அன்றும், இன்றும் கவலை ஒன்றுமில்லை! 

ஓரிரு சொற்களைத் தவிர மாற்றம் ஏதுமின்றி, 'சிதம்பர ரகசியம்' ஸ்வாமியம்...

சிதம்பர ரகசியத்தைச்
சென்று, பார்த்து, பின்
ஒன்றும் புரியாமல்
ஊருக்கு வந்தேன்!

பக்கத்துக்கு ஊருக்கொரு
பக்கிரி* வந்தாரென்று
பக்தர்கள் எல்லோரும்
படைதிரண்டு சென்றனர்.

சித்துக்கள் புரியாத
சித்தரவர் என்றனர்!
வித்தைகள் புரியாத
வித்தகர் என்றனர்!

பேருரைகள் ஆற்றாமல்
பிரசங்கங்கள் புரியாமல்
மக்கள் குறைதீர்க்கும்
மௌனகுரு என்றனர்!

நானும் போனேன்.
நகைமுகம் கண்டேன்.
ஒன்றுமே வேண்டாமல்
ஓரமாய் நின்றேன்.

‘என்குறை தீரும், என்குறை தீரும்'
என்றவர் விடுத்து
என்னையே நோக்கினார்.
‘இங்கு வா’ என்றார்.
எதிரில் போய் நின்றேன்.

‘நீ யார்?’ என்றார்.
‘நான் மனிதன்!’ என்றேன்.

‘இது என்ன?’ என்றார்.
‘என் உடல்!’ என்றேன்.

‘இறப்புக்குப் பின்னால்?’
‘வெறும் பிணம்!’ என்றேன்.

‘அதற்கும் பின்னால்?’
‘அவ்வளவுதான்!’ என்றேன்.

‘அவ்வளவே என்றால்?’
‘ஒன்றுமில்லை!’ என்றேன்.

‘அதுதான்!’ என்றார்.
அடுத்தவரைப் பார்த்தார்.

ஏதும் கேட்காமல்
எல்லாம் புரிந்தது.
எல்லாமே எதுவும்

இல்லையென்றும் தெரி(ளி)ந்தது!  

*பக்கிரி - சாமியார்.

~ @PrakashSwamy

Tuesday, 15 April 2014

Song of Soul!

A flower's Blossom, smiling at All…
A meadow's Blade, dancing in Wind…

A calf's Hop, leaping in Joy…
A cow's Moo, heeding with Care…

A raindrop's Fall, hugging the Earth…
A ray's Glow, diffracting the Sun…

A dog's Roll, seeking a Rub…
A monkey's Vault, way up the Tree…

A tree's Rustle, waking the Leaves…
A bamboo's Tune, soothing the Soul…

A bird's Coo, welcoming the Dusk…
A bell's Chime, echoing like Rhyme…  

A waft's Caress, parting the Mane…
A river's Flow, ambling at Ease…

A baby's Guffaw, melting the Heart…
A lover's Embrace, merging the Two…

A mountain’s Wait, meditating in Silence…
A lamp's Flame, illuminating the Mind…

A seeker’s Quest, longing for Grace…
A tear's Drop, not of sorrow but Joy…

In every action of Nature's creation…
In the myriad forms, shapes, size and hue…

I see Life, when my eyes are opened…
I hear Life, when my ears are opened…
I taste Life, when my lips are opened…
I touch Life, when my limbs are opened…

I know Life, when my mind is opened…
I live Life, when my heart is opened…
I become Life, when I let them open my Soul!

@PrakashSwamy

Saturday, 8 March 2014

பெண்மை!

தன்னுள் தாங்கி, தவமாய்ச் சுமந்து,  
தன்னிடமிருந்து பிரித்து, தனதாக வளர்த்து,
தன்னலமின்றி உயிர் தரும் தெய்வத் தாய்...

முன்னோ பின்னோ உடன் பிறந்து,
கண்ணால் கருத்தறிந்து, கடிந்து, காத்து,
எண்ணமறிந்து உதவி புரியும் அன்புச் சகோதரி...

கண்களால் கவிதை சொல்லி, கைகளால் தலை கோதி
விண்மீன் எண்ணி முடியும் வரை என்னவோ கதை பேசி,
இப்பிறவி இவளுக்காக என ஏங்க வைக்கும் காந்தக் காதலி...


முன்பின் அறியா முரடனோ மூடனோ,
முதலில் தயங்கி, பின் என்னவன் என்றபின் மயங்கி,

அன்பும், அரவணைப்பும் அளிக்கும் ஆருயிர் மனைவி...



சொந்த உறவின்றி, பந்தப் பசையின்றி,
குற்றம், குறை, கவிதை, காதல், கவலையென்று,
எந்த விஷயமும் பொறுமையாய்க் கேட்டு வழிகாட்டும் அருமைத் தோழி...

ன்பில் அகல்
ர்வத்தில் அனல்,
னிமையில் சந்திரன்
கையில் வான்மழை,
ணர்வில் செந்தணல்
க்கத்தில் எறும்பு,
ண்ணத்தில் ஒருமை
க்கத்தில் பன்மை,
ம்புலனும் கொண்டு அடுத்தவர்க்குத் தொண்டு,
துக்கும் துணிவு
டி உதவும் கனிவு,
டதமாய் அளவின்றி அளிக்கும் அன்பு,

கின் உறுதிகொண்ட, எதற்கும் அயராத...

ஈடா எனும் இறை சக்தித் தன்மை
ஈடிலா உயிராய் மலர்ந்ததே பெண்மை!



Friday, 7 March 2014

Silence!

Silence is the call of the divine!
Noise is how we try to understand any communication,
No different from the bovine.

Silence is the medium for transformation of the soul!
Noise is the way of transaction of ideas and thoughts through words,
Eerily like an animal’s howl.

Silence is singular and omnipresent, yet not listened to by many!
Noise is varied in form, tone and pitch,
Yet conveys little to a limited number of listeners, if any.

Silence, when deep, will open the floodgates of tears!
Noise, when loud,
Will force one to close both ears.

Silence is easy to practice, even in large groups!
Noise isn’t that easy to avoid,
Even in small troops.

Silence pervades deep within and can result in instinctive action!
Noise prevails at surface level,
And mostly results in impulsive reaction.

Silence establishes a strong connection between the transmitter (Guru) and the receiver (seeker)!
Noise the weakest connection between two,
That conveys very little to a listener from the speaker.

Silence is practiced by most beings other than human, living or not!
Noise is prevalent among humans,
Who don’t care to comprehend this gift that all other beings got.

Silence is the white light that illuminates the soul and guides one on the journey to self-realization!
Noise is the black hole that sucks away all energy,
And misguides one on the tour of self-preservation.

Silence is the symphony where the body, mind and soul synchronize in perfect harmony!
Noise is the cacophony that tears apart any semblance of vibration,
Resulting in utter disharmony.

Silence is the gentle breeze that lets one sway to the tune of nature!
Noise is the typhoon that blasts away one’s ability to listen,
Reducing all and sundry to a mere caricature.

Silence is the only manure ever needed for the self to blossom!
Noise over a long tenure will drown one,
Inside a painful, worry filled chasm.

Silence is the source of creation, emanating from the sacred AUM!
Noise is the cause of destruction,
Encircling us in a meaningless word filled storm.

Silence is the eternal state of bliss, for all realized beings!
Noise is the infernal state that has gone amiss,
For most human beings.

For all those who chose to merely exist in this lifetime,
Noise holds sway.
For the few who chose to live Life the way it is, 
Silence is the Way!
.
.
.
Note: All photographs belong to Isha Foundation.

Monday, 24 February 2014

Yet!

We keep fish swimming in a tank, yet
We love strolling on the beach...
Marveling at the vastness of ocean!

We keep dogs tightly on a leash, yet
We love walking them around proudly...
Ignoring their stray brethren on streets!

We keep birds chirping in a cage, yet
We love viewing through fancy binoculars...
Gaping at the graceful flight of free birds!

We keep plants confined in pots, yet
We love yakking about saving the environment...
Waxing eloquent on green cover of roadside trees!

We keep children enrolled in institutions, yet
We love wanting them to learn more and grow...
Forgetting that simply studying isn't learning!

We keep ourselves locked in places, yet
We love traveling around the world...
Limiting our existence within walled boundaries!

We keep thoughts wrapped in words, yet
We love expressing ideas through speech...
Forgetting silence is the sky where word stars glitter!

We keep gods at a distance in temples, yet
We love praying to them daily for endless wants...
Failing to realise the Divine that resides within us!

We keep Life complex as a maze, yet
We love figuring out one path after another...
Searching pointlessly forever, Life the way it is!

@PrakashSwamy