Showing posts with label Seeker. Show all posts
Showing posts with label Seeker. Show all posts

Wednesday, 29 June 2016

KAdhalkondaeN (காதல்கொண்டேன்)


KAdhalkondaeN ~ Hymn explanation
(காதல்கொண்டேன் ~ பதிக விளக்கம்)

மன்மத கரும்புவில் வீசிடு மரும்பெனும்
   அம்பது இலாதேம யங்கிடுவார் யாரும்
வெண்பட் டுடன்வைர வைடூர்ய மரகதச்
   செம்பொன் சேர்ந்தமணி முத்தாடு மாபரணங்
கண்கொண்டு காணும் யாவையும் வேண்டியே
   ஐம்பூத மாற்செய்த அழியுமிவ் வுடலுக்கு
மண்கொண்டு போகுமொரு நாளிதை யென்றாலும்
   இம்மியும் மாறாது ஈனவழி மீளாது
பண்கொண்டு பாடியே பாவவாழ் வினைவிட்டு
   ஐம்பொன் சிலையலங் காரமே தும்மின்றி   
கண்மூடி நான்கண்ட கோவணப் பாலகச்
    சம்பூர்ண ஷண்முகன் மேல்கொண்டனே காதல்!   

மன்மதன் தன் கரும்பு வில்லிலிருந்து மலர்மொட்டுக்களாலான அம்பை வீசாமலேயே எல்லோரும் வெண்பட்டுத் துணி, வைர வைடூர்ய மணிகள் மற்றும் முத்துப் பதித்த பொன்னாலான ஆபரணங்கள் போன்ற கண்ணால் காணும் எல்லாப் பொருட்களையும், ஐம்பூதங்களாலான அழியக்கூடிய இந்த உடலுக்காக விரும்புவர், ஒருநாள் இதைப் பூமி எடுத்துக்கொண்டுவிடுமேன்றாலும்கூட.

(ஆனால் நானோ) இசையுடன் கூடிய பாடல் பாடி (இந்தப்) பாவ வாழ்வின் வினையை விட்டுவிட்டு, ஐம்பொன்னால் செய்த, அலங்காரமேதுமில்லாத, என் கண்களை மூடியபோது (என்னுள்) கண்ட, (வெறும்) கோவணம் அணிந்த குழந்தையான பரிபூரணமான ஆறுமுகன் மேல் காதல் கொண்டேனே!  

Manmadha karumbuvil vEsidu marumbenum
   ambadhu ilAdhema yangiduvAr yArum
veNpat tudanvaira vaidoorya maragathach
   sembon serndhamaNi muththAdu mAbaraNang
kaNkoNdu kANum yAvaiyum veNdiyae
   aibootha mARseidha azhiyumiv vidalukku
maNkoNdu pOgumoru nhAlidhai yendRAlum
   immiyum mARadhu eenavazhi meeLAdhu
paNkoNdu pAdiye pAvavAzh vinaivittu
   aimbon silaiyalang gAramae dhummindri
kaNmoodi nhAnkaNda kOvaNap bAlagach
   sampoorNa shanmukhan maelkoNdanae kaadhal!

Even without the floral arrows from the sugarcane bow being shot at them by Manmadhan (Lord of Love), everybody lusts for (shiny) white silk garments and fine gold jewelry embellished with diamonds, cats eye (a gem called Vaidooryam), pearls and everything they see, for this perishable body, even though it will be consumed by earth one day.

(But) Singing hymns with music, letting go of this sinful Life, (I) fell in love with the child that I saw when I closed my eyes, who wears just a loin cloth and looks like a (plain) Panchaloha (alloy of 5 metals) statue without any decorations!
~Swamy

UruvilAppEroLi (உருவிலாப்பேரொளி)


UruvilAppEroLi ~ Hymn explanation
(உருவிலாப்பேரொளி ~ பதிக விளக்கம்)

உருவி லாதபெரு ஒளியிலான திருக்
கயிலை நாதன்பத மதுகாண
கருவி லாதவனின் அருமைபாடி வழி
படுவ தேயெளிய வழியாமே
குருவு மாகிதென் துருவநோக்கி யெழு
முனிவர் ஞானமளி யருளாளா
மருவி லாதுமன இருளைநீக்கி யென
துயிரைச் சீக்கிரமா யுனதாக்கி
தெரு வெலாமுனது பெருமை பாடிதினம்
தொழுது போற்றும்பணி தருவாயே
சிறுமை நீக்கிமனந் தெளிய தாக்கியுயர்
பதவிவீடு பெறவருள் தாராய்!

உருவம் ஏதுமில்லாத மிகப்பெரிய ஒளிவடிவமான (திருமால் மற்றும் பிரம்மன் முன் தோன்றிய அடி முடி காணா ஜோதிச் சுடர் வடிவம்) திருக்கைலையின் தலைவனது திருவடியைக் காண, (அந்தக்) கருவில்லாது தோன்றியவனது (யக்ஷனாகிய சிவபெருமானுக்குத் தாய் தந்தை முதலாகிய ஆதி அந்தம் ஏதும் கிடையாது) அருமை பெருமைகளைப் பாடி வழிபடுவது மிக எளிய வழியாகும் (அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் முதலான 63 நாயன்மார்கள் தொழுத வழி இதுவே).

(முதல்)குருவாக தென்திசை நோக்கியமர்ந்து சப்தரிஷிகள் எனப்போற்றப்படும் ஏழு முனிவர்களுக்கு ஞானமளித்த அருள்வடிவமாகிய (என்) தலைவனே, (நீ) மாசு மறு ஏதுமின்றி என் மனத்திலுள்ள அறியாமை இருளை நீக்கித் தூய்மைப்படுத்தி, எனது உயிரை விரைவாக உன்னுடையதாக்கிக்கொண்டு, (ஊர்த்) தெருக்களில் எல்லாம் உனது பெருமையை தினமும் பாடி, உன்னைத் தொழுது போற்றும் பணியைத் (தயவுகூர்ந்து எனக்கு) தருவாய். (அதன்மூலம்) என்னுடைய (மானிட வாழ்வின்) சிறுமையை நீக்கி, எனது (கலங்கிடும்) மனத்தைத் தெளிவாக்கி, உயர்பதவியாகிய வீடுபேற்றை (ஞானோதயம் அல்லது மெய்யுணர்தல்) நான் அடைய (நீ) அருள்புரிவாய்.     

~ஸ்வாமி   

Uruvi lAdha peru oliyilAna thiruk
Kayilai NhAdhanpadha madhukANa
Karuvi lAdhavanin arumaipAdi vazhi
Paduva dheyeLiya vazhiyAmae
Guruvu maagithen dhuruvaNhOkki yezhu
Munivar gnAnamaLi yaruLALA
Maruvi lAdhumana iruLaiNheekki yena
Dhuyiraich seekkiramA yunadhAkki
Theru velAmunadhu perumai pAdidhinam
Thozhudhu pOtRumpaNi tharuvAyae
siRumai Nheekkimanandh theliya dhAkkiyuyar
Padhaviveedu peRavaruL thArAi.

In order to see the sacred feet of the Lord of the sacred Kailash mountain, who is a formless (in the form of) magnificent light (he appeared as a towering Linga of light to Vishnu & Brahma, who could neither find the top nor the bottom), the easiest way is to worship him by singing the praise (like the 63 Nayanmars starting with Appar, Sundarar, ThirugnAnasambandhar & MAnikkavAsakar) of the one who didn’t appear from a womb (Lord Shiva is a Yaksha who doesn’t have mother, father or origin).

Oh lord, who as Adiguru DakshinAmurthy sat facing the south and transmitted the yogic wisdom to the seven sages known as Saptharishis, please cleanse my mind of the darkness of ignorance and take my soul sooner, and offer me the opportunity to serve you devotedly by singing your praise in all the streets of the town. Through that, please clear my mind of all doubts / worries and bless me to attain the higher state of enlightenment (self realisation).

~ @PrakashSwamy

VeLiVeLi (வெளிவெளி)!


VeLiVeLi ~ Hymn explanation
(வெளிவெளி ~ பதிக விளக்கம்)

வெளிவெளி வட்டவாழ் வுற்றருடன் சுற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி வெட்டிவாழ் வேட்கையைப் பற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி கொட்டமடி கூட்டமொடு சிற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி பட்டம்பல வித்தைகளுங் கற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி திட்டமொடு கற்றதனை விற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி சட்டமிகு சாத்திரமொ டொற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி கட்டையுடல் மறுத்துபற் றற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி நிட்டையில் நாதனரு ளூற்றுவாழ் வேண்டும்!

வெளிவெளிஎன இருமுறை குறிப்பிடப்படுவது உள்ளுறையும் உருவிலா ஈசனின் வெளிதோற்றமான நம்மையும் (முதல் வெளி) அதனைப் பிறர் அறிந்த, தெரிந்த, புரிந்த தன்மையையும் (இரண்டாவது வெளி) குறிக்கும். இவை இரண்டுமே மாயை.

ஒரு (குறுகிய) வட்டத்துள் உற்றார் மற்றும் சுற்றத்தாருடன் வாழும்  வெளிவெளி வாழ்க்கையை வேண்டேன் (நான் விரும்பவில்லை)

(உயர் நோக்கமில்லாது) வெட்டியாக ஆசையைப் பற்றிக்கொண்டு வாழும் வெளிவெளி வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

(ஆட்டம் பாட்டம் குடி கூத்து என) கொட்டமடிக்கும் கூட்டத்தாரோடு சிற்றின்பத்தை நாடும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

வெறுமனே (முடியும் என்பதால் அல்லது பிறர் செய்வதால்) பட்டங்கள் பெற்று பல வித்தைகள் கற்று (பயனிலாது) வாழும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)   

(சமூகத்தில் உயரும் பொருட்டு) திட்டமிட்டு கற்றவற்றை (பொருள் ஈட்டுவதற்காக) விற்று வாழும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

(கடுமையான) சட்டங்களுடன் கூடிய சாத்திர வழிமுறைகளைக் (ஏன், எதற்கு என்று அறியாமலே) கடைபிடித்து வாழும் (போலி) வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)     

(அதற்காக இப்பிறவியில் பெற்ற) வெறும் கட்டை போன்ற இவ்வுடலை மறுத்து (அதைப் பேணுவதற்காக கவனம் செலுத்தாமல்) எவ்விதப் பற்றுமில்லாது வாழும் வாழ்க்கையை(யும்) வேண்டேன் (விரும்பவில்லை)  

(எப்போதும் - விழித்திருக்கும்போதுகூட) தியானத்தில் ஈசனருள் ஒரு ஊற்றுப் போலப் பெருக்கெடுக்கும் (ஞானமடைந்த பெரியோர்கள் போல) வாழ்வை வாழ வேண்டும் (என நான் விரும்புகிறேன்)
~ ஸ்வாமி  

VeLiVeLi vattavAzh vuTRarudan suTRuvAzh vENdEn
VeLiVeLi vettivAzh vEtkayaip paTRuvAzh vENdEn
VeLiVeLi kottamadi koottamodu siTRuvAzh vENdEn
VeLiVeLi pattampala viTHaigalum kaTRuvAzh vENdEn
VeLiVeLi thittamodu kaTRadhanai viTRuvAzh vENdEn
VeLiVeLi sattamigu sATHiramo doTRuvAzh vENdEn
VeLiVeLi kattayudal maRuTHupaTR aTRuvAzh vENdEn
VeLiVeLi Nhittayil NhAdhanaru LooTRuvAzh vENdum

VeLiVeLi (emptiness outside) is the external expression (beyond the perceived personality) of the (inner) self. The dual emphasis is because the self (அருவம் aka Purusha i.e. Shiva) that resides in the UlVeLi (உள்வெளி - emptiness within) that finds expression thru the being (உருவம் aka PrAkruti i.e. Shakti - not just human, but all beings created) in the external emptiness (vast void of the known & expanding universe), which in turn is perceived differently by different beings! 🙏🏼😌🙌🏼 Both are MAyA (not reality / Truth).

In the emptiness outside…

(I) don’t desire the Life within a limited circle of near & dear

(I) don’t desire the purposeless Life lived by holding on to (one’s) desires

(I) don’t desire the Life of / with those who (senselessly) seek only pleasures of the sense organs

(I) don’t desire the Life full of degrees & titles that merely represent the accumulation of knowledge & skills (but lacking awareness)

(I) don’t desire the Life of scheming to sell my knowledge (for survival / better social status)

(I) don’t desire the Life full of hard rules & regulations that are expected to be followed (without really knowing the purpose)    

(I) don’t desire the Life that rejects this being (physical form) and leaves everything (like a renunciate)

(I) desire the Life in which (even when I am awake) I’m at peace (as if in meditation) with the Lord’s Grace flowing like a stream (forever).

~ @PrakashSwamy

Wednesday, 31 December 2014

I am. Not!

In the higher peaks of me
I tried seeing myself,
Only to realize...
I am not my Self.

In the denser forests of me
I tried smelling myself,
Only to realize...
I am not my Self.

In the broader spectrum of me
I tried hearing myself,
Only to realize...
I am not my Self.

In the deeper oceans of me
I tried tasting myself,
Only to realize...
I am not my Self.

In the farther lands of me
I tried touching myself,
Only to realize...
I am not my Self.

I tried seeing far, but
Could not see my Self.

I tried smelling deep, but
Could not smell my Self.

I tried hearing sharp, but
Could not hear my Self.

I tried tasting strong, but
Could not taste my Self.

I tried touching hard, but
Could touch my Self.


I tried, tried, tried, tried and tried…

In the vaster expanses of me
I tried thinking of myself,
Only to realize...I am not my Self.


I tried again,
And then realized…

I am neither the peak,
Nor am I the seen...

I am neither the forest,
Nor am I the smell…

I am neither the spectrum,
Nor am I the sound…

I am neither the ocean,
Nor am I the taste…

I am neither the land,
Nor am I the touch…


I stopped trying,
And then realized…

I am a distant relative of Self
On the rare occasions we meet, 
I think... 
Self contemplates... and 
Both of us remain Silent!


I fell silent,
And then…

In my quest to find my Self
I realized I am not myself... and 
Only when I and me disappear, 
The Self will appear!


I remained silent,
And…

The Self is the peak and seeing… and
Beyond the heights seen.

The Self is the forest and smelling… and
Beyond the dense smelt.

The Self is the spectrum and hearing… and
Beyond the sounds heard.

The Self is the ocean and tasting… and
Beyond the depths tasted.

The Self is the land and touching… and
Beyond the reaches touched.

The Self is the mind and thinking… and
Beyond the expanses of thought.


I remained…

The Self is the sense… and
Beyond the senses!

The Self is the thought… and
Beyond the thoughts!

The Self is silence… and
Beyond the silence!


The Self is all… and
Beyond the all!

The Self is I… and
Beyond the I!

I...


The Self Is…
I Am. Not!

@PrakashSwamy, ACC